இன்றைய வார்த்தை:
14.03.2024 / வியாழன் 
வசனம்:
நீதிமொழிகள் 14:27 
"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்."
 
செய்தி:
            நாம் கர்த்தருக்கு பயந்து பரிசுத்தமாக வாழ வேண்டும். அவர் நாமத்தை உயர்த்த வேண்டும். அவருக்கு பயந்து வாழ்வதால் நமக்கு ஜீவன் கிடைக்கும். அவருக்கு பிரியமாக நாம் வாழும்போது நமக்கு நித்தியஜீவன் உண்டு. ஆகவே நாம் அவருக்கு பயந்து எப்போதும் வாழ வேண்டும். இவ்வுலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல் பரிசுத்தமாக வாழ வேண்டும். அப்போது அவர் நம்மை எல்லா தீங்குக்கும் விலக்கி காப்பார். நம்மை மரணத்துக்கு விலக்கி காப்பார். நம்மை ஜீவனின் பாதையில் நடத்துவார். கர்த்தருக்கு பயந்து வாழும்போது அவர் நமக்கு நடக்க வேண்டிய வழியை போதிப்பார். பாவத்துக்கு விலகி பரிசுத்தமாக வாழ உதவி செய்வார். மரணமாகிய நரகத்துக்கு விலக்கி காப்பார்‌.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருக்கு பயந்து நடக்க ஜெபிப்போம்.