இன்றைய வார்த்தை:
26.02.2024 / திங்கள் 
வசனம்:
நியாயாதிபதிகள் 13:18
"அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்."
 
செய்தி:
            கர்த்தர் அதிசயமானவர். அவர் நாம் நினைத்து பார்க்க முடியாத காரியங்களை நம் வாழ்வில் செய்வார். நாம் ஆச்சரியப்படத்தக்க காரியங்களை நமக்கு செய்வார். நாம் அறியாததும் எட்டாததுமாகிய பெரிய காரியங்களை நமக்கு செய்வார். நாம் எதிர்பாரா செயல்களை நமக்கு செய்வார். நாம் முடியாது என்று நினைத்த காரியங்களை நமக்கு முடிய பண்ணுவார். நமக்காக எதையும் செய்வார். நாம் அவரோடு இருக்கும்போது அவர் என்றும் நம்மோடு இருப்பார். நம்மை காத்து நித்தமும் நடத்துவார். வழியில்லாத இடங்களில் புது வழிகளை நமக்காக திறப்பார்‌. நம் பாதையில் இருக்கும் தடைகளை நீக்கி நமக்கு வழியை உண்டாக்குவார். நாம் கண்டு மகிழத் தக்க காரியங்களை நமக்காக செய்வார். ஆகவே எந்த சூழ்நிலையிலும் நாம் அவரை விசுவாசிக்கும் போது அவர் நமக்காக எதையும் செய்வார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் அதிசயங்களை செய்யும் கர்த்தரை விசுவாசிக்க  ஜெபிப்போம்.