09.02.2024 / வெள்ளி
வசனம்:
ஏசாயா 62:3
"நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்."
செய்தி:
நாம் கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமாக இருக்கிறோம். அவருக்குப் பிரியமாக நாம் வாழும்போது அவருக்காக எழும்பி பிரகாசிக்க நமக்கு உதவி செய்வார். அவருக்காக நம்மை வல்லமையாக பயன்படுத்துவார். நம்மை கொண்டு பலரை அவர் ராஜ்யத்துக்காக சேர்ப்பார். அவரை விசுவாசிக்கும் போது பிறர் நம்மை கண்டு ஆச்சரியப்படும் படி நம்மை உயர்த்துவார். நாம் செல்லும் இடமெல்லாம் நம்மை சாட்சியாக நிறுத்துவார். நம் வாழ்க்கையின் மூலமாக பலரை இரட்சிப்பார். நாம் தலையிடும் காரியங்களை வாய்க்க பண்ணுவார். எல்லா காரியங்களையும் வெற்றியாய் முடிய பண்ணுவார். நாம் அவருக்காக வாழும்போது அவர் நமக்காக யாவையும் செய்வார். நம்மை மேன்மைப்படுத்துவார். அவருடைய கரத்தில் விலையேறப்பெற்ற பொருளை போல இருப்போம்.
ஜெபம்:
அனைத்து மக்களும் கர்த்தருக்காக செயல்பட ஜெபிப்போம்.
0 Comments