இன்றைய வார்த்தை:
08.02.2024 / வியாழன் 
வசனம்:
‭‭ஏசாயா‬ ‭61:10‬ ‭
"கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்."
 
செய்தி:
             கர்த்தருக்குள் நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவரில் நாம் எப்போதும் களிகூர வேண்டும். கர்த்தர் நம்மை இரட்சித்து மீட்டதால் அவரில் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அவர் நீதியின் பாதையில் நடத்துவதால் மகிழ வேண்டும். அவருடைய இரட்சிப்பு நித்தியமானது. அதுவே நமக்கு நித்திய மகிழ்ச்சியை தரும். நிறைவான மகிழ்ச்சியை நமக்கு தருவது அதுவே. அவரது இரட்சிப்பினால் நாம் சமாதானம் பெறுகிறோம். நீதியின் வழியில் நடப்பதன் மூலமே நமக்கு இரட்சிப்பு உண்டாகிறது. அவரால் நாம் இரட்சிக்கப்பட்டால் மட்டுமே பரலோகத்திற்கு செல்ல முடியும். ஆகவே நாமும் நீதியின் வழியில் அவருக்கு பிரியமாக வாழ்வோம். 

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருக்குள் எப்போதும் மகிழ்ந்திருக்க ஜெபிப்போம்.