இன்றைய வார்த்தை:
17.02.2024 / சனி 
வசனம்:
நியாயாதிபதிகள் 2:7 
"யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்."
 
செய்தி:
           யோசுவாவின் நாட்களில் கர்த்தர் பலத்த காரியங்களை செய்தார். யோசுவாவை கொண்டு கர்த்தர் வல்லமையான காரியங்களை நிறைவேற்றினார். யோசுவாவை கர்த்தர் தமக்காக பயன்படுத்தினார். யோசுவா கர்த்தருக்கு பயந்து பரிசுத்தமாக வாழ்ந்தான் . ஆகவே மோசேக்கு பிறகு இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த கர்த்தர் அவனை தெரிந்துகொண்டார். யோசுவாவின் மூலமாக கர்த்தர் செய்த காரியங்களை கண்ட ஜனங்கள் அனைவரும் அவரை உறுதியாக விசுவாசித்தார்கள். அவரையே உண்மையாய் சேவித்தார்கள். யோசுவா கர்த்தரை உறுதியாக பிடித்து கொண்டதினால் கர்த்தர் அவனை பயன்படுத்தினார். கர்த்தர் அவனை பயன்படுத்தியதால் அதை கண்ட ஜனங்கள் கர்த்தரை விசுவாசித்தார்கள். ஆகவே நாமும் பரிசுத்தமாக வாழ வேண்டும். நம்மை குறித்து அவர் கொண்டிருக்கும் சித்தத்தை அறிந்து அதை நிறைவேற்ற வேண்டும். அப்போது கர்த்தர் நம்மை வல்லமையாக பயன்படுத்துவார். நம்மை கொண்டு அவர் செய்யும் காரியங்களை பிறர் கண்டு கர்த்தரை ஏற்று கொள்வார்கள். தங்கள் பாவங்களை விட்டு விலகி மனந்திரும்பி வாழ்வார்கள். ஆகவே கர்த்தர் நம்மை பயன்படுத்த நாம் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரையே சேவிக்க ஜெபிப்போம்.