இன்றைய வார்த்தை:
16.02.2023 / வெள்ளி 
வசனம்:
சங்கீதம் 96:7
"ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும், வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்."
 
செய்தி:
            கர்த்தர் வல்லமையுள்ளவர். அவர் சகலத்தையும் செய்ய வல்லவர். அவர் சகலத்தையும் படைத்தவர். அவர் அகிலத்தையும் ஆள்பவர்‌ அவரே நம் தேவன். இவ்வளவு நல்ல தேவன் நம் தேவனாக இருக்கிறார். நம்மை தம்முடைய மகனாக மகளாக தெரிந்து கொண்டார். நம்மை தமது உயிரினும் மேலாக நேசித்தார். நமக்காக தமது ஜீவனை கொடுத்தார். அவரே எல்லா மகிமையும் உடையவர். அவரே எல்லா கனத்துக்கும் துதிக்கும் பாத்திரர். அவருடைய வல்லமைக்கு நிகர் யாருமில்லை. அவருடைய செயல்கள் மகத்தானவை. அவருடைய செயல்களை நினைத்து அவரை துதித்து கொண்டே இருக்க வேண்டும். அவர் நமக்கு பாராட்டின தயவுகளை நினைத்து நன்றி செலுத்த வேண்டும். 

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரின் வல்லமையை விசுவாசிக்க ஜெபிப்போம்.