இன்றைய வார்த்தை:
15.02.2024 / வியாழன் 
வசனம்:
ஏசாயா 66:13
"ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்."
செய்தி:
     ‌           நாம் கர்த்தருடையவர்கள். நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம். நாம் அவருடைய மேய்ச்சலின் ஆடுகளாக இருக்கிறோம். நாம் அவரை விசுவாசித்தால் அவருடைய பிள்ளைகாளாகிறோம். அவருடைய இரத்தத்தால் கழுவப்படும்போது நம் பாவங்கள் நீங்கி பரிசுத்தமாகிறோம். பரிசுத்தத்தினால் அவருடன் இணைகிறோம். அவ்வாறு நாம் இருக்கும்போது அவர் நம் தகப்பனாக இருந்து நம்மை சுமப்பார். தாயை போல நம்மை ஆற்றி தேற்றுவார். நம்மை ஒருபோதும் வெறுக்காமல் நேசிப்பார். ஒரு தாய் தன் குமாரனை நேசிப்பதை விட அதிகமாக நம்மேல் அன்புகூருகிறார். அவருடைய அன்புக்கு நாம் பாத்திரவான்களாக இல்லாத போதிலும் தமது கிருபையால் நமக்கு இரங்கினார். அவர் நாம மகிமைக்காக நம்மை தெரிந்துகொண்டார். நம்மை கொண்டு தமது இராஜ்யத்தை கட்டுகிறார். அவருடைய அன்பை அனுதினமும் நினைத்து அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தரை விசுவாசித்து அவரால் தேற்றப்பட ஜெபிப்போம்.