இன்றைய வார்த்தை:
13.02.2024 / செவ்வாய் 
வசனம்:
‭‭ஏசாயா 65:17 
" இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை."
 
செய்தி:
              கர்த்தர் நம்மை இரட்சித்தார். அவர் நம் பாவங்களை மன்னித்து நம்மை மீட்டார். நம்மை பரிசுத்த படுத்தினார். நம்மை புது சிருஷ்டியாக மாற்றினார். அவர் புதிதாக மாற்றினால் அது மீண்டும் பழையதாய் போவதில்லை. பழையவைகள் நினைக்க படுவதும் இல்லை. நம் பாவங்களும் பழைய மனிதனுக்குரியது. அவற்றை அவர் நீக்கி தமது இரத்தத்தால் கழுவி சுத்திகரித்து விட்டார். இனி அவை ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை. நம்மை அவர் ஒருமுறை மன்னித்தாலே அது முழுவதுமாக மறக்கப்படும். முந்தி நமக்கு நடந்த தீமையான காரியங்களையும் நாம் நினைக்க கூடாது. அவற்றை மறந்துவிட வேண்டும். முந்தினதை நினைத்து கலங்க கூடாது. கர்த்தர் நமக்காக புதிய காரியங்களை செய்துள்ளார். அதை நினைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். அவரை மகிமைப்படுத்த வேண்டும்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் முந்தினவைகளை நினைக்காமல் அவற்றை மறந்து சந்தோஷமாக இருக்க ஜெபிப்போம்.