இன்றைய வார்த்தை:
12.02.2024 / திங்கள் 
வசனம்:
ஏசாயா‬ ‭64:4‬ ‭
"தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை."
 
செய்தி:
           கர்த்தர் நமக்காக அற்புதமான காரியங்களை நம் வாழ்வில் செய்வார். அவர் நமக்காக செய்ய வேண்டியதை உலகத் தோற்றத்துக்கு முன்னமே முன்குறித்து விட்டார். நம் வாழ்வை நம்மை உருவாக்கும் முன்னமே வரைந்து விட்டார். அவர் நமக்காய் முன்குறித்ததை ஒருவரும் கற்களால் கண்டதில்லை. ஒருவருடைய செவியால் கேட்டதும் இல்லை. ஒருவருடைய இதயத்திலும் தோன்றியதும் இல்லை. அப்பேற்பட்ட மகத்தான காரியங்களை நம் வாழ்வில் அவர் முன்குறித்துள்ளார். ஆனால் அதனை பெற்றுக்கொள்ள நாம் பொறுமையோடும் விசுவாசத்தோடும் காத்திருக்க வேண்டும். நம்மை சோதித்து புடமிட்ட பிறகே அதனை அடைய செய்வார். நாம் விட வேண்டிய பாவங்களை விட்டு அவருக்கு பிரியமான காரியங்களை செய்யும் போது அவர் அந்த ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க உதவி செய்வார். அவருக்கு காத்திருக்கிறவர்களுக்கு அவர் செய்யும் காரியங்கள் மிகவும் மகத்தானவை.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தருக்காக காத்திருந்து அற்புதங்களை பெற்றுக் கொள்ள  ஜெபிப்போம்.