இன்றைய வார்த்தை:
10.02.2024 / சனி 
வசனம்:
ஏசாயா‬ ‭63:7‬ ‭
"கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன்."
 
செய்தி:
            கர்த்தர் நமக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். அவர் நம்மால் நினைத்து பார்க்க முடியாத அதிசயங்களை நமக்கு செய்துள்ளார். நம்மேல் மிகுந்த தயவுள்ளவராக இருந்துள்ளார். தமது கிருபையால் நம்மை இரட்சித்து மீட்டார். அவர் நமக்கு இதுவரை செய்த நன்மைகளை அனுதினமும் நினைத்து பார்க்க வேண்டும். ஒருபோதும் அவற்றை மறந்துவிட கூடாது. பிறர் நமக்கு செய்த துன்பங்களை மறந்து விட வேண்டும். நாம் முன் செய்து வந்த பாவங்களை மறக்க வேண்டும். ஆனால் ஒருபோதும் அவர் நமக்கு பாராட்டின கிருபையை மறக்க கூடாது. அதனை நினைத்து அனுதினமும் நன்றி செலுத்த வேண்டும். அவர் நமக்கு அருளிய எல்லா ஈவுக்காகவும் அவருக்காக வாழ்வதே அவருக்கு நாம் செய்யும் நன்றிப்பலன். அவருடைய துதியை நம் உயிர் உள்ளவரை பாட வேண்டும். அவர் நாமத்தை மகிமைப்படுத்தி அதனை பிறருக்கு கூற வேண்டும். பலரை அவருக்கு நேராக வழிநடத்த வேண்டும். அப்போது கர்த்தர் நம்மை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:
      அனைத்து மக்களும் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்க ஜெபிப்போம்.